Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வரத்து அதிகரிப்பால்் பூக்கள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால்் பூக்கள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால்் பூக்கள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால்் பூக்கள் விலை சரிவு

ADDED : ஜன 25, 2024 10:20 AM


Google News
ப.வேலுார்: ப.வேலுார் பூ மார்க்கெட்டுக்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

தோட்டத்தில் விளைந்த பூக்களை கூலியாட்கள் மூலம் பறித்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்தில், தினந்தோறும் நடக்கும் ஏலத்தில் விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. தற்போது, பூ விளைச்சல் அதிகமானதால், நேற்று மார்க்கெட்டுக்கும் வரத்து அதிகமானது. இதனால், பூக்கள் விலை சரிந்தது.

அதன்படி, கடந்த வாரம், 2,500 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டுமல்லி, நேற்று, 1,200 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 140 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற அரளி, 160 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 140 ரூபாய்க்கும்

விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us