Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் சரிந்து விழும் நிலையில் நான்கு மாடி கட்டடங்கள் உள்ள நிலையில், அதனை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கிழக்கு டில்லியின் பிஹாரி காலனி ஷாஹ்தாராவில் உள்ள நான்கு மாடி கட்டடம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான்கு மாடி கட்டடத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவரையும் அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் நான்கு மாடி கட்டடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கட்டடத்தை காலி செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us