Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

ADDED : மே 29, 2025 01:36 AM


Google News
நாமக்கல், 'நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நாளை, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட அளவில், மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறியப்படும்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரம், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us