Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகள் திருட்டு

நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகள் திருட்டு

நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகள் திருட்டு

நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகள் திருட்டு

ADDED : ஜூன் 15, 2025 01:57 AM


Google News
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சண்முகம்; இவர், நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு கோழிப்பண்ணைக்கு வந்தார். அப்போது, இவர் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்தது.

கோழிகளும் திருடப்பட்டிருந்தன. 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, இரவில் மர்ம நபர்கள் நால்வர் வந்து, நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளனர். பின், பண்ணையில் இருந்த, 20 நாட்டு கோழிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us