ADDED : ஜூன் 15, 2025 01:57 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியில் ரயில் பாதை செல்கிறது.
இந்த
ரயில் பாதை அருகே ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மாலை வெப்படை
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,
சடலத்தை கைப்பற்றினர். இறந்தவர் யார், எந்த ஊர் உள்ளிட்ட விபரங்கள்
தெரியவில்லை. இறந்த, மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால்,
உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு,
பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து, வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.