ADDED : ஜூன் 24, 2024 03:14 AM
சேந்தமங்கலம்;கொல்லிமலை, ஓசானி நகரில் மாணிக்க சித்தர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பிரத்யங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. யாகத் தில், மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடக்கும் சிறப்பு யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். கடந்த, 21ல் பவுர்ணமியை யொட்டி, பிரத்யங்கிரா தேவி யாகம் நடந்தது. மாலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாகம், 10:00 மணிக்கு முடிந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.