/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'கர்சீப்' நிறுவனத்தில் பணம் திருடியவர் கைது 'கர்சீப்' நிறுவனத்தில் பணம் திருடியவர் கைது
'கர்சீப்' நிறுவனத்தில் பணம் திருடியவர் கைது
'கர்சீப்' நிறுவனத்தில் பணம் திருடியவர் கைது
'கர்சீப்' நிறுவனத்தில் பணம் திருடியவர் கைது
ADDED : ஜூலை 19, 2024 02:22 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், சிவசக்தி நகர் பகுதியில், 'கர்சீப்' தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஷ்ராஜ், 41. இவர் கடந்த, 11 இரவு, 7:00 மணியளவில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை, அலுவலக லாக்கரில் வைத்து சென்றார்.
மறுநாள் காலை, 9:00 மணிக்கு வந்து பார்த்தபோது, அலுவல-கத்தின் பின்புற தகர சீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், லாக்கரில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, குமாரபாளையம் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து களவாணியை தேடி வந்தனர். இந்நிலையில், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கள்-ளக்குறிச்சியை சேர்ந்த வேலு, 51, என்பவர் பணம், ஆவணங்-களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்-தனர்.