Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூலை 19, 2024 02:21 AM


Google News
பள்ளிப்பாளையம்: காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாசன விவ-சாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆக.,ல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதை பயன்படுத்தி சேலம், நாமக்கல் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவர். பள்ளிப்பாளையம் சுற்று வட்டா-ரத்தில் மட்டும், இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து, வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம்.

கடந்த பிப்., முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வந்-தது. இதனால் வாய்க்கால் பாசன விவசாயிகள் கவலையடைந்-தனர். தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்-ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரம், மேட்டூர் கிழக்கு-கரை பாசன வசதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி கதிர்-வேலு கூறியதாவது:

தற்போது, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம-டைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரு-கிறது. இதனால் நீர்மட்டம் மள, மளவென உயர வாய்ப்புள்-ளதால், இந்தாண்டு பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்-கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us