Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடம்

ADDED : ஜூலை 18, 2024 01:15 AM


Google News
சேந்தமங்கலம்,: சேந்தமங்கலம் யூனியன், வெட்டுக்காட்டில் ஏழு ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சேந்தமங்கலம் யூனியன், உத்திரக்காவல் பஞ்., வெட்டுக்-காட்டில், கடந்த, 2016ல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்-துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை மைய கட்-டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணியால் திறக்கப்பட்டது. அதன்பின் இந்த கட்-டடத்தை பஞ்., நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்ட-தாலும், கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் இல்லா-ததாலும், இந்த சேவை மைய கட்டடத்தை பயன்படுத்தாமல், கடந்த, ஏழு ஆண்டாக அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். எனவே, பஞ்., நிர்வாகம் பூட்டி வைத்துள்ள இந்த கட்டடத்தை வேறு அரசு பணிக்கு பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us