Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'ஜேடர்பாளையம் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கணும்'

'ஜேடர்பாளையம் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கணும்'

'ஜேடர்பாளையம் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கணும்'

'ஜேடர்பாளையம் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கணும்'

ADDED : மார் 12, 2025 08:06 AM


Google News
ப.வேலுார்: -ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தினமும் காலை, 8:15 மணிக்கு பொத்தனுார், பாண்டமங்கலம் வழியாக ஜேடர்பாளை-யத்துக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர்

பயணிக்கின்றனர். காலையில், 8:15 மணிக்கு அந்த பஸ்சை தவறவிட்டால், மீண்டும், இரண்டு மணி நேரம் கழித்து, 10:15 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் தான் செல்ல வேண்டும்.இதனால், ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை, கட்டட பணிகளுக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே, காலை, 9:00 மணிக்கு பின் அடுத்தடுத்து ஜேடர்பாளை-யத்துக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும். மேலும், காலை, 9:00 மணிக்கு வெங்கரை செல்லும் அரசு பஸ்சை, ஜேடர்பாளையம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us