Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உழவர் சந்தையில் 24 டன் காய்கறி ரூ.10.33 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தையில் 24 டன் காய்கறி ரூ.10.33 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தையில் 24 டன் காய்கறி ரூ.10.33 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தையில் 24 டன் காய்கறி ரூ.10.33 லட்சத்திற்கு விற்பனை

ADDED : ஜூலை 22, 2024 08:11 AM


Google News
நாமக்கல் ; நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்-கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்க-ளுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை-யான நேற்று, மொத்தம், 141 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 19,665 கிலோ காய்கறிகள், 4,550 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள், 380 கிலோ இதர காய்கறிகள், என, மொத்தம், 24,615 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்பனை செய்-யப்பட்டன.அவற்றை, 4,890 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 10 லட்சத்து, 33,940 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 60 ரூபாய், கத்தரி, 56, வெண்டை, 36, சின்ன வெங்காயம், 52, பெரிய வெங்காயம், 46, இஞ்சி, 175 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us