/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
ADDED : ஜூலை 22, 2024 08:11 AM
நாமக்கல் ; 'பசுமை தமிழகம் திட்டத்தில், வனத்துறை சார்பில் மாவட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் முதன்மை திட்டமான, 'பசுமை தமி-ழக இயக்கம்', மாநிலத்தின் பசுமைப்பரப்பை அதி-கரிக்கும் நோக்கத்துடன், 2021ல் தொடங்கப்பட்-டது. நாமக்கல் மாவட்டத்திலும், பசுமை பரப்பை மேம்படுத்த, நாமக்கல் வனக்கோட்டம் சார்பில், 2024-25ல், மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் மேற்-கொண்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்டத்தின் மண் வளத்திற்கு ஏற்ற பூர்வீக மர இனங்கள் மற்றும் பல்வேறு மர வேலைப்பாடுகளுக்கு உகந்த விலை மதிப்பு மிக்க உயர் தர மரக்கன்றுகள், அனைத்து வனத்-துறை நாற்றாங்கால்களிலும் உற்பத்தி செய்யப்-பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.மேலும், தரமான ஆல், அரசு, அத்தி, நீர் மருது, புங்கன், வேம்பு, தேக்கு, மகாகனி, வேங்கை, செம்மரம், நாவல், சவுக்கு மற்றும் பிற மரக்கன்-றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் தாலுகா பகுதியில் உள்ளவர்கள், வனச்சரக அலு-வலர் சந்திரசேகரனை, 9942062486, 04286281369 மூலம் தொடர்புகொண்டு தேவையான மரக்கன்-றுகளை பெறலாம்.ராசிபுரம்- சக்திவேல், 8883985972, அன்பரசு, 93458 68554, சேந்தமங்கலம் நந்தகுமார், 93443 64987, ப.வேலுார் அருள்குமார், 9842702859, திருச்செங்-கோடு முரளி, 9698892071, கொல்லிமலை சுகுமார், 88701 14906, தீபக், 89036 66909, கோபி, 97891 31707, குமாரபாளையம் பிரவீன்குமார், 75501 95814, செல்வம், 97875 45460, மோகனுார் சந்திர-சேகரன், 99420 62486 ஆகியோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம். இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.