/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை
புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை
புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை
புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை
ADDED : ஜூலை 22, 2024 08:08 AM
மல்லசமுத்திரம், ; திருச்செங்கோடு உட்கோட்டத்தில் முடிவுற்ற மற்றும் நடந்து வரும் சாலைப்பணிகளின் தரத்தை, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சோதனை செய்தார்.
தமிழக முதல்வரின் சாலை மேம்பாடு திட்-டத்தின் கீழ் நடந்து வரும் ஓமலுார், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டார். அப்போது, அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் தரத்தை உறுதி செய்தார்.
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்-செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நட-ராஜன், தரக்கட்டுப்பாடு உதவிகோட்ட பொறி-யாளர் தமிழரசி மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.