Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

நாமகிரிப்பேட்டை அருகே சொத்துக்காக மூதாட்டி கொலை

ADDED : ஜூலை 22, 2024 08:07 AM


Google News
நாமகிரிப்பேட்டை ; நாமகிரிப்பேட்டை அருகே, சொத்துக்காக மூதாட்டியை கொலை செய்த உறவினர், 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி பஸ் ஸ்டாப்பை சேர்ந்தவர் போதுமணி, 57; கணவர் பூமாலை. இவர் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன்கள் இருவரும் இறந்து-விட்டனர்.

ஒரு மகன் மட்டும் திருமணாகி சில மாதங்களிலேயே இறந்ததால், மருமகள் பாப்பி-ரெட்டிப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று-விட்டார். இதனால், தனியாக வசித்த போதுமணி, தன், 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். கடந்த வாரம், போதுமணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆயில்பட்டி போலீசார், போதுமணியின் மருமக-ளிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்-தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்-படுத்தினர். போதுமணியின் சம்பந்திகளான பாப்-பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயராமன், 54, துளசி, 45, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தனியாக வசித்து வந்த போதுமணி, தன்னை கவனித்து வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு-வரின் மகனை தத்தெடுத்து சொத்தை அந்த பையனுக்கு தந்து விடுவதாக பேசி வந்துள்ளார். இந்த தகவல் மருமகளின் குடும்பத்திற்கு தெரிய-வந்துள்ளது. போதுமணி, சொத்தை தத்து மக-னுக்கு கொடுத்து விட்டால், தங்கள் மகளுக்கு சொத்து கிடைக்காது என்பதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, அதே பகு-தியை சேர்ந்த மாணிக்கம் மகன் கலியமூர்த்தி, 40, ஏற்பாட்டில், மேட்டூரை சேர்ந்த கூலிப்படை-யான வெங்கட்ராமன், ஜீவானந்தம் ஆகியோரை, போதுமணியை கொலை செய்ய நியமித்தனர்.கூலிப்படையினர், சம்பவத்தன்று போதுமணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, துாங்கிக் கொண்டிருந்த போதுமணியை, தலைய-ணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்-ளனர். பின், அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, ஜெயராமன், துளசி, கலியமூர்த்தி ஆகிய மூன்று பேரையும் ஆயில்பட்டி போலீசார், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us