Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

ADDED : ஜூலை 22, 2024 08:17 AM


Google News
நாமக்கல் : ஆடி பவுர்ணமி மற்றும் குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு, நாமக்கல் - பரமத்தி சாலை, வள்ளி-புரம் அடுத்த தொட்டிப்பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், நேற்று காலை, 8:15 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தி நடந்தது. காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை, சாயி சத்திய விரத பூஜையும், கூட்டு பிரார்த்தனையும் நடந்-தது.

தொடர்ந்து, உற்சவர் சாய்பாபாவிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்-பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி, பஜனை நிகழ்ச்சி, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாரா-தனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாயி சத்சரிதம் பாராயணம், சாயி நாம ஜெபம் பாடினர். அனைத்து பக்தர்களுக்கும், காலை, 8:30 முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் வழங்கப்-பட்டது. வள்ளிபுரத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் வகையில் இலவச வாகனம் இயக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us