Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

ADDED : ஜூலை 22, 2024 08:16 AM


Google News
நாமக்கல் ; நாமக்கல், திருச்செங்கோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட, மொத்தம், 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹிந்து முன்னணி சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. நாமக்-கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.செயற்குழு உறுப்பினர் தர்மதுரை, செயலாளர் ஜெகதீஷ், செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்-டத்தில், தமிழர்களின் பண்பாடு, கலாசார மைய-மாக விளங்கும் கோவில்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது.கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 7 பேர் கைது செய்யப்பட்டு, நக-ராட்சி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்-டனர்.* அதேபோல், திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டதால், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட, 46 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்ட-பத்தில் அடைக்கப்பட்டனர். நாமக்கல், திருச்-செங்கோட்டில், மொத்தம், 53 பேர் கைது செய்-யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us