Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

ADDED : ஜூலை 24, 2024 08:09 AM


Google News
ராசிபுரம், : ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, நெடுஞ்சாலை ஒட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு சார்பில், நுாற்றுக்கணக்-கானோர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரத்தில் இயங்கி வரும் புதிய பஸ் ஸ்டாண்ட், 30 ஆண்டுக-ளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை, வாகன அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த நகராட்சி கூட்டத்தில் நகர எல்லையை விரிவுபடுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வரவேற்கிறோம்.

அவ்வாறு அமையும் புதிய பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டியவாறு அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபார தேவை, கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு கூறப்பட்டி-ருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us