/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 08:08 AM
குமாரபாளையம் : தமிழகத்தில், மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடையில் வழங்கப்படும் பருப்பு, பாமா-யிலை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், குமாரபாளையம் பள்ளி-பாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலர் பால சுப்ரமணி தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. மாதம் ஒரு-முறை மின் கட்டணம் என்றனர். கொரோனா முடிந்தவுடன் மின் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தினர். ஆண்டுக்கு 6 சதவீதம் என்று உயர்த்திக்கொண்டு உள்ளனர். இதனால், 20 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரிசாக மின் கட்டணம் உயர்த்தி உள்-ளனர். தி.மு.க.,வினர் பொய் தகவலை பரப்பி வருகின்றனர். உதய் திட்டத்தில் அ.தி.மு.க.,வினர் கையெழுத்து போட்ட-தால்தான், மின் கட்டணம் உயர்ந்து உள்ளது என கூறி வருகின்-றனர்.
கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கூட, இதே புகாரை கூறி வருகிறார். அந்த கட்சி ஆட்சி செய்யும் கேரளாவிலும் இந்த திட்-டத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். ஆட்சியை சரியாக நடத்த முடியாமல் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மத்திய அரசு மீது குறை சொல்லி, மக்களுக்கு எதிராக மின் கட்டணம் உயர்த்தி வருகின்றனர். இலவச வேட்டி, சேலை நாங்கள் இருக்கும் போது, ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்து விடுவோம், ஆனால் இவர்கள் தாமதமாக ஆர்டர் கொடுப்பதால் சரிவர கொடுக்க முடி-யாத நிலை ஏற்படுகிறது. மது பானங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், டெலிவரி செய்ய வரும் போது, வீட்டில் பெண்கள் இருந்தால் கலாசாரம் வீணாகும். இதை தடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கூறினேன். ஆனால் அவர்கள் இன்னும் சொல்லிக்-கொண்டுதான் உள்ளனர். வந்தாலும் வரலாம்.
இவ்வாறு கூறினார்.