Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

ADDED : ஜூலை 07, 2024 07:10 AM


Google News
நாமக்கல் : அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக அதி-ரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்-திய அளவிலான மகளிர் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, 30 அணிகளை சேர்ந்த, 450க்கும் மேற்-பட்ட வீராங்கனையர் பங்கேற்றனர்.

அதில், நாமக்கல் ஆயுதப்படை வீராங்கனை கீதா, நான்கு வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற ஆயுதப்படை போலீஸ் கீதாவை, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்-கண்ணன் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்-பெக்டர் சக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us