ADDED : ஜூலை 07, 2024 07:14 AM
குமாரபாளையம், : குமாரபாளையம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது விற்-பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகு-தியில் மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்-தனர்.
இதேபோல், சத்யா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளி சுரேந்-திரன், 35, என்பவர், மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.