Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

ADDED : ஜூன் 03, 2024 07:14 AM


Google News
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் வேளாண் பயிர்களில் இலைப்பேன், அசுவினி போன்ற பூச்சிகள் பாதிப்பு அதிகம் உள்ளது.

இதை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து நாமகிரிப்பேட்டை வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்த, 5 கி.கி., வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து, 100 லி., தண்ணீரில், 3 முதல், 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்க பயன்படுத்தலாம். இவை, நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, இவைகளை விவசாயிகள் தயக்கமின்றி பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us