Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி; ஒரே நாளில் ரூ.10.76 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி; ஒரே நாளில் ரூ.10.76 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி; ஒரே நாளில் ரூ.10.76 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி; ஒரே நாளில் ரூ.10.76 லட்சத்துக்கு விற்பனை

ADDED : ஜூன் 03, 2024 07:13 AM


Google News
நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 26 டன் காய்கறி, 10.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே நகரின் முக்கிய பகுதியில் சந்தை இருப்பதால், நாமக்கல் நகர் மக்கள் அனைவருக்கும் இந்த சந்தை பயனுள்ளதாக உள்ளது. தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், தங்கள் வேளாண் நிலங்களில் அறுவடை செய்யும் காய், பழம், பூ உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

விடுமுறை, விரத தினம், புரட்டாசி மாதம், முகூர்த்த தினங்களில் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விவசாயிகளும் அதிகளவு வந்து தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து செல்கின்றனர். மேற்கண்ட தினங்களில் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்துவிடும்.

நேற்று, ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூர்த்த தினம் என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. 151 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 21,265 கிலோ காய்கறி, 4,905 கிலோ பழங்கள், 420 கிலோ பூக்கள் என மொத்தம், 26,620 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 10 லட்சத்து, 76,320 ரூபாயாகும்.

கத்தரி கிலோ, 28 ரூபாய், வெண்டைக்காய், 42, தக்காளி, 36, புடலை, 60, பீர்க்கன்காய், 60, பாகற்காய் 80, சுரைக்காய், 20, பூசணி, 30, சின்ன வெங்காயம், 55, பெரிய வெங்காயம், 34 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us