Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிலுவை பி.எப்., வட்டித்தொகை மாநகராட்சி எப்போது வழங்கும் ஆசிரியர்கள் போர்க்கொடி

நிலுவை பி.எப்., வட்டித்தொகை மாநகராட்சி எப்போது வழங்கும் ஆசிரியர்கள் போர்க்கொடி

நிலுவை பி.எப்., வட்டித்தொகை மாநகராட்சி எப்போது வழங்கும் ஆசிரியர்கள் போர்க்கொடி

நிலுவை பி.எப்., வட்டித்தொகை மாநகராட்சி எப்போது வழங்கும் ஆசிரியர்கள் போர்க்கொடி

ADDED : ஜன 08, 2025 06:39 AM


Google News
மதுரை : மதுரை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பி.எப்., வட்டித் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

மாநகராட்சி கல்வி பிரிவில் பணியாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு 1990 முதல் 2019 வரை வழங்க வேண்டிய , வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) தொகை, வட்டியுடன் ரூ. 20 கோடி 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 என கணக்கிடப்பட்டது. உரிய விதிப்படி இப்பணத்தை 2019 மார்ச்சுக்குள் மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தி ஆசிரியர்கள் பயனடைந்திருக்க வேண்டும்.

ஆனால் மாநகராட்சி தாமதமாக செலுத்தியது. இதனால் அதற்கான வட்டியாக தற்போது வரை ரூ.8 கோடிக்கு மேல் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கணக்கிடப்பட்டது. இந்த நிலுவை பி.எப்., வட்டியை வழங்க வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து விரைவில் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: பி.எப்., தொகையை தாமதமாக செலுத்தியதால் அதற்கான வட்டியாக ரூ.8 கோடிக்கு மேல் செலுத்த வேண்டிய நிலையால் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது நிலுவை பி.எப்., வட்டியையும் செலுத்த தாமதித்தால் வட்டித் தொகை மேலும் அதிகரிக்கும். எனவே விரைவில் வழங்க வேண்டும். தாமதித்தால் பொங்கல் பண்டிகைக்கு பின் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us