ADDED : மே 27, 2025 01:11 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பத்ரகாளியம்மன், தெப்பத்து கருப்பசுவாமி கோயில் வைகாசி உற்ஸவத்தில் அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார்.
முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை அக்னிச்சட்டி, இரவு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.