ADDED : மே 27, 2025 01:10 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜூன் 9 காலை 6:00 மணி முதல் வாடிப்பட்டி மவுன குருசாமி மடத்தில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி கோயிலுக்கு வருவர். சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெறும். ஜூன் 10 மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி, சீர்வரிசையுடன் பட்டு பல்லாக்கும், ஜூன் 11ல் பூப்பல்லக்கும் நடக்கிறது.