ADDED : ஜன 12, 2024 06:53 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு பல்லக்கில்அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார்.
ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.
தென்பரங்குன்றம் நாக முத்துமாரியம்மன் கோயிலில் பிரத்தியங்கரா தேவிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மகா வராஹி வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமானது.