ADDED : செப் 03, 2025 05:45 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள பள்ளங்களால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகிறது.
மதுரையில் இருந்து திண்டுக்கல், பெரியகுளம், கோவை, திருப்பூருக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கின்றன.
பஸ்கள் நுழையும், வெளியேறும் பகுதிகளில் ரோட்டில் பள்ளங்கள் உள்ளன. இதில் மழைநீர் தேங்கி உள்ளது.
பஸ்கள் பள்ளத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது. ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இப்பகுதிகளில் பள்ளம் ஏற்படுவதும், தண்ணீர் தேங்குவதும், நாளுக்கு நாள் விரிவடைவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர் அடிக்கடி விழுந்து எழுந்து காயமடைந்து செல்கின்றனர். பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.