ADDED : செப் 02, 2025 03:31 AM
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சி.எம்.ட்ராபி மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள் செப். 10, 11 க்கு மாற்றப்பட்டுள்ளன.
செப். 6 ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த தடகளப் போட்டிகள் செப். 10க்கு மாற்றப்பட்டுள்ளது. செப். 8 ல் நடைபெற இருந்த இறகுபந்து, டேபிள் டென்னிஸ், கபடி, எறிபந்து, அடாப்டட் வாலிபால் போட்டிகள் செப். 11 க்கு மாற்றப்பட்டுள்ளது. போட்டி நாளில் காலை 7:00 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் மைதானம் வரவேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.