Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை

கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை

கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை

கபடி வீரர் குடும்பத்துக்கு காப்பீடு தொகை

ADDED : ஜன 01, 2024 05:40 AM


Google News
சிலைமான்; மதுரை வண்டியூரை சேர்ந்த சரவணக்குமார் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநில கபடி போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர்.

பொள்ளாச்சி அருகே அக்., 9 ல் டூவீலர் விபத்தில் இறந்தார். அவருக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வந்து அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அமெச்சூர் கபடி கழக மாநிலத்தலைவர் சோலை ராஜா, வேலம்மாள் முருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மணிவண்ணன், இன்சூரன்ஸ் கிளை மேலாளர் பாலமுருகன், பொதுநல காப்பீட்டு அதிகாரி தாயுமானசுந்தரம் ஆகியோர் இறந்த வீரரின் தந்தை பாலமுருகனிடம் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us