ADDED : ஜன 06, 2024 06:18 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.82 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சுவாமிநாதன், வார்டு கவுன்சிலர்கள் குத்து விளக்கேற்றினர்.
கவுன்சிலர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜூலான் பானு முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள், தி.மு.க., நிர்வாகிகள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.