Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புறக்கணிக்கும் டவுன் பஸ்கள்; மாணவர்கள் பரிதவிப்பு

புறக்கணிக்கும் டவுன் பஸ்கள்; மாணவர்கள் பரிதவிப்பு

புறக்கணிக்கும் டவுன் பஸ்கள்; மாணவர்கள் பரிதவிப்பு

புறக்கணிக்கும் டவுன் பஸ்கள்; மாணவர்கள் பரிதவிப்பு

ADDED : மே 15, 2025 02:12 AM


Google News
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் பகுதி பஸ் நிறுத்தங்களில் குறைந்தளவு பயணிகள் நின்று கைகாட்டினால் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன.

திருப்பரங்குன்றம், பசுமலை, ஹார்விபட்டி, திருநகர், தோப்பூர், கூத்தியார் குண்டு ஆகிய பஸ் ஸ்டாப்களும், இடையில் மூலக்கரை, முல்லைநகர், தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் பஸ் ஸ்டாப்களும் உள்ளன. இந்த பஸ் ஸ்டாப்களில் ஒரு பயணி நின்று கை காட்டினால் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் நிற்பதில்லை. அந்த பஸ்ஸில் பயணிக்கும் பயணி அங்கு இறங்கினால் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்தில் பசுமலை, மூலக்கரை, ஹார்விபட்டி, திருநகர் 3வது நிறுத்தத்தில் அதிகளவில் மாணவர்கள் நிற்கின்றனர். அவர்களை பார்க்கும் பல டவுன் பஸ் டிரைவர்கள் ஸ்டாப்பில் இருந்து வெகுதுாரம் தள்ளிச் சென்று பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர்.

பஸ்சுக்கு காத்திருக்கும் மாணவர்கள் அந்த பஸ்சை பிடிக்க ஓடுகின்றனர். இதில் பலர் விழுந்து காயமடைகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தங்களை புறக்கணிக்கும் பஸ்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இப்பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us