ADDED : செப் 11, 2025 05:13 AM
மதுரை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேளாண் பொறியியல் துறை சார்பில் இளைஞர்களுக்கான டிராக்டர் உதவி ஆப்பரேட்டர் இலவச பயிற்சி ஒத்தகடை நெல்லி யேந்தல்பட்டி அரசு இயந்திர கலப்பை பணி மனையில் செப். 15 முதல் 27 நாட்கள் நடைபெறுகின்றன.
35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். கல்வித்தகுதி தேவையில்லை. டிராக்டர், வேளாண் கருவிகள் இயக்கும் முறை, பராமரிப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின் டிராக்டர் டிரைவர் லைசென்ஸ் பெற்றுத் தரப்படும். விருப்பமுள்ள வர்கள் 98659 67063ல் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை வேளாண் பொறியயில் துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.