/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜூன் 13, 2025 02:50 AM
மதுரை: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி வருகிற ஜூலை 7ல் நடக்கிறது.
மதுரை தானப்பமுதலி தெரு திருவாவடுதுறை ஆதின மடத்தில் காலை 9:30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 8 முதல் 10 மாணவர்களே அனுமதிக்கப்படுவர். 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் இரண்டும், 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் மூன்று அல்லது சிவபுராணம், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையும் ஒப்புவித்தலுக்கான மனப்பாடப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சிவனை 94439 30540 ல் தொடர்பு கொள்ளலாம்.