ADDED : மே 10, 2025 06:08 AM
சோழவந்தான்; சோழவந்தான் தென்கரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சப்பர தேரோட்டம் நடந்தது.
செயல் அலுவலர் கார்த்திகைச் செல்வி துவக்கி வைத்தார். ஐந்து சப்பரங்கள் நான்கு ரத வீதிகளில் உலா வந்தன. விநாயகர், முருகர், சந்திரசேகரமூர்த்தி, அகிலாண்டேஸ்வரிஅம்மன், சண்டிகேஸ்வரர் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மண்டகப்படிதார் முருகன் குடும்பத்தார் மற்றும் ரமேஷ் செய்திருந்தனர்.