மதுரை: சுற்றுலாத்துறை சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் சுகாதாரம் மற்றும் துாய்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி சுற்றுலாத்துறை மாணவர்கள் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
சுற்றுலா பயணிகளிடம் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், அலுவலர் முனியசாமி, சுற்றுலாத்துறைத் தலைவர் ஜார்ஜ், மியூசிய செயலாளர் நந்தாராவ், காப்பாட்சியர் நடராஜன், காப்பாட்சியர் மருது பாண்டியன் பங்கேற்றனர்.