ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?
ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?
ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?

கடும் அதிருப்தி
தேவகவுடா குடும்பத்திற்கு இருக்கும் ஒக்கலிகர்கள் ஆதரவை பெற, சிவகுமார் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'பல ஆண்டுகளுக்கு பின்பு ஒக்கலிக சமூகத்திற்கு, முதல்வர் ஆகும் வாய்ப்பு கணிந்து வருகிறது' என்று, சிவகுமார் கூறியிருந்தார். இதனால் ஒக்கலிகர்கள் பார்வை, சிவகுமார் மீது திரும்பியது. அவர் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில், ஒக்கலிகர்கள் காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்ததாக அக்கட்சியினர் கூறினர்.
பா.ஜ.,வுக்கு பிளஸ்
இதை குமாரசாமி சாதகமாக பயன்படுத்தி கொண்டார். பழைய மைசூரில் பா.ஜ.,வுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டால், சட்டசபை தேர்தலில் இழந்த ஒக்கலிகர்கள் ஆதரவை திரும்ப பெறலாம் என்று கணக்கு போட்டார். அதன்படி பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தார்.
அதிகார ஆணவம்
இது குறித்து, பழைய மைசூரு பகுதியை சேர்ந்த ம.ஜ.த., பிரமுகர்கள் கூறியதாவது: