/உள்ளூர் செய்திகள்/மதுரை/கண்மாய்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்புகண்மாய்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
கண்மாய்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
கண்மாய்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
கண்மாய்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 07, 2024 06:48 AM
திருப்பரங்குன்றம்: கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் கூடுதல் மழைநீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்கள், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியில் உள்ள கண்மாய்கள் வைகை தண்ணீரால் நிரம்பும். இந்தாண்டு கண்மாய்களுக்கு மழை நீர் திறக்கப்பட்டது. விளாச்சேரி, பானாங்குளம், சேமட்டான்குளம், செவ்வந்திகுளம், குறுக்கட்டான், நிலையூர் பெரிய கண்மாய்கள் ஏற்கனவே நிரம்பி உள்ளன.
பின்பு கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியிலுள்ள பரம்புபட்டி, வலையப்பட்டி, வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, தொட்டியபட்டி, சோளங்குருணி, நல்லுார் உள்பட பல்வேறு கண்மாய்களுக்கு மழை நீர் திறக்கப்பட்டது. நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதனால் அக்கண்மாய்க்கு திறக்கப்பட்ட மழை நீரின் அளவு குறைக்கப்பட்டு, கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் கூடுதலாக மழை நீர் திறக்கப்பட்டுள்ளது. கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதியில் உள்ள சில கண்மாய்கள் நிரம்பியுள்ளன. தற்போது கூடுதலாக மழை நீர் திறக்கப்பட்டுள்ளதால் மற்ற கண்மாய்களும் நிரம்பும் நிலை உள்ளது.