
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் இயற்கை வள பாதுகாப்பு குழு, நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் ஜோதிராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். அறக்கட்டளை தெய்வேந்திரகுமார், பவித்ராஸ்ரீ, ரமேஷ் உள்ளிட்டோர் வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் குறித்து பயிற்சி அளித்தனர்.