ADDED : ஜூன் 12, 2024 12:27 AM
மதுரை : மதுரை செல்வகுமார் 33. இவர், வீட்டில் தனியாக இருந்த ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தல்லாகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.
போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமாரவேல்:
செல்வகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.