/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிதிலமடைந்த கல்மண்டபம் வாரிசுதாரர்கள் பராமரிப்பு சிதிலமடைந்த கல்மண்டபம் வாரிசுதாரர்கள் பராமரிப்பு
சிதிலமடைந்த கல்மண்டபம் வாரிசுதாரர்கள் பராமரிப்பு
சிதிலமடைந்த கல்மண்டபம் வாரிசுதாரர்கள் பராமரிப்பு
சிதிலமடைந்த கல்மண்டபம் வாரிசுதாரர்கள் பராமரிப்பு
ADDED : ஜூன் 23, 2024 04:05 AM
மதுரை: மதுரை வடபழஞ்சியில் 200 ஆண்டுகள் பழமையான கல்மண்டபம் சிதிலமடைந்து கிடப்பதாக ஜூன் 18 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அச்செய்தியில் மதுரை காமராஜ் பல்கலை ஆய்வு மாணவர் வினோத் , ''இந்நிலத்தின் உரிமையாளருக்கு வாரிசு இல்லாததால் மண்டபம் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் உள்ளதாக'' தெரிவித்து இருந்தார். வாரிசு இல்லை என்பது தவறானது.
இதுதொடர்பாக திருப்பாலை எஸ்.நாராயணன் கூறுகையில், ''மதுரை திருப்பாலையில் வசித்து வரும் எல்.செல்லத்துரை, எஸ்.எல்.நாராயணன், எஸ்.எல்.ராதாகிருஷ்ணன், எம்.சுந்தரமூர்த்தி, ஆர்.ரமேஷ், ஆர்.சவுந்தரராஜன், இ.ராமதிலகம், ஜெ.யோகா ஆகியோர் வாரிசுதாரர்களாக இருந்து கல்மண்டபத்தை பராமரித்து வருகிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.