Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பராமரிக்காத சுகாதார வளாகம் ; திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு

பராமரிக்காத சுகாதார வளாகம் ; திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு

பராமரிக்காத சுகாதார வளாகம் ; திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு

பராமரிக்காத சுகாதார வளாகம் ; திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிப்பு

ADDED : ஜூலை 29, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் உள்ள சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களின் 75 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கடைக்கோடி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஊருணி, கண்மாய், கருவேலம் மரங்கள் அடர்ந்துள்ள நத்தம் புறம்போக்கு நிலம், ஊரின் ஒதுக்குப்புறங்களை மக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இதற்குக் காரணம் செயல்படாத பராமரிப்பற்ற சுகாதார வளாகங்களே. ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதார வளாகங்களை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கட்டடங்கள், கழிப்பறை கதவுகள், குழாய்கள் சேதம் அடைந்து பாழாகி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரித்துவிட்டன.

மத்திய அரசு செயல்படுத்திய துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி விட்டது. அத்திட்டம் செயல்படுத்திய போது மட்டும் கழிப்பறையை பயன்படுத்திய மக்கள் அதன்பின் பராமரிப்பு இல்லாததால் அதனை பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இந்த வளாகங்களை அதிகாரிகளும் ஆய்வு செய்யவில்லை. அனைத்து ஊராட்சிகளின் சுகாதார வளாகமும் இந்நிலையில்தான் உள்ளது.

இச்சுகாதார வளாகங்களை சீரமைத்து, மகளிர் குழுக்கள் மூலம் பராமரித்தால் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us