ADDED : ஜூன் 09, 2024 02:56 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணி குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
நீதிபதி செல்லையா தலைமை வகித்தார். நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வழக்கறிஞர்கள் முத்துமணி, தங்கப்பாண்டி, தயாநிதி, வெள்ளைச்சாமி, சத்தியமூர்த்தி, சக்திவேல், அருண்ராஜ், சவுந்தரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.