118 ஏட்டுகளுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு
118 ஏட்டுகளுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு
118 ஏட்டுகளுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு
ADDED : ஜூன் 09, 2024 02:56 AM
மதுரை : மதுரை நகரில் 118 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
போலீஸ் பணியில் கான்ஸ்டபிளாக சேர்ந்தவர்கள் எவ்வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தால் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி 1999ல் சேர்ந்து மதுரை நகரில் பணியாற்றும் 118 ஏட்டுகளுக்கு மே 25க்கு பிறகு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பதவி உயர்வு தள்ளிப்போனது. இருநாட்களுக்கு முன் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பதவி உயர்வு அளித்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.