ADDED : மார் 14, 2025 05:46 AM
மதுரை: மதுரை யாதவா கல்லுாரியில் காந்தி மியூசியம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், கணக்காளர் சுமித்ரா கலந்து கொண்டனர். டிஜிட்டல் விழிப்புணர்வு குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் கோகுலகிருஷ்ணன், மார்க்கெட்டிங் மேலாளர் சதீஷ் பேசினர். வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் விவேக், விமலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.