/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு 'கெடு' உயர்நீதிமன்றம் உத்தரவு போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு 'கெடு' உயர்நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு 'கெடு' உயர்நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு 'கெடு' உயர்நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு 'கெடு' உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 05, 2024 12:01 AM
மதுரை, : மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கோச்சடை ஜெயா ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
ஒருவரது வீட்டில் நகை திருட்டு குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் 2019 ல் புகார் அளிக்கப்பட்டது. எனது 17 வயது மகனை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் சோதனையிட்டனர். நகை எதுவும் கிடைக்கவில்லை.
நகை திருடுபோனதற்கு மகன்தான் பொறுப்பு என ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் நிர்பந்தித்துள்ளனர். அவரை சட்டவிரோதமாக சில நாட்கள் காவலில் வைத்து துன்புறுத்தினர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மகன் 2019 ஜன.,24ல் இறந்தார். இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.
எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
2023 ஆக.,18ல் தனி நீதிபதி: மனுதாரர் குடும்பம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற தகுதி உண்டு. ஏற்கனவே அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதம் ரூ.20 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
மதுரை கீழமை நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி முடிவை பொறுத்து இழப்பீடு தொகையை யாரிடம் வசூலிப்பது என்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம்.
மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. தமிழக உள்துறை செயலர்தான் முடிவெடுக்க இயலும். இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உள்துறை செயலர், டி.ஜி.பி.,மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: ரூ.20 லட்சத்தை தேசியமய வங்கியில் 4 வாரங்களில் அரசு டிபாசிட் செய்ய வேண்டும். மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை 80 சதவீதம் முடிந்துள்ளது. விசாரணையை அந்நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலானால், அரசு மேல்நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. இவ்வழக்கு அக்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.