ADDED : ஜூன் 11, 2024 06:43 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை(ஜூன் 12) முதல் ஆனி ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது.
ஜூன் 21 வரை நடக்கும் இந்த உற்ஸவத்தில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப் பொன்னுாஞ்சல் ஓதப்படும்.
அதன்பிறகு தீபாராதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடை பெறும்.
ஆனி பவுர்ணமி தினமான 21ம் தேதி உச்சிகால வேளையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனியால் அபிேஷகம் நடக்கிறது. அன்றிரவு 7:00 மணிக்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் அம்மன், சுவாமி புறப்பாடு நடைபெறும்.