ADDED : மார் 14, 2025 05:47 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பணியாளர்கள் 11 பேருக்கு தொழில்நுட்பத் திறன் உதவியாளர் பதவி உயர்வுக்கான உத்தரவுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா வழங்கினர்.
மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 19 பேருக்கு தேர்ச்சி திறன் நிலை 2ல் இருந்து தொழில்நுட்ப உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் வெங்கடேசன், சித்ர அபிமன்யு, வீரபரணிதாஸ் உட்பட 11 பேருக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் (பணி) அருணாச்சலம், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.