ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள, மேல் சாமல்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் அருள்வேடி, 24, கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. நேற்று அதிகாலை சாமல்பட்டி பகுதியில் உள்ள, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது, அவ்வழியாக சென்ற ரயில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பத்துார் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.