Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

ADDED : மே 12, 2025 02:38 AM


Google News
கிருஷ்ணகிரி: சிலிண்டர் போட வந்ததாக கூறி, 18 பேரிடம் நுாதன முறையில் பண மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், தனியார் மருத்துவம-னையில் டாக்டராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் போனில் பேசிய நபர், தான் சிலிண்டர் வினியோகம் செய்-பவர் என்றும், உங்கள் வீட்டிற்கு சிலிண்டர் வந்துள்ளது. அதற்-கான தொகையை கூகுள்பே மூலம் அனுப்புங்கள் என கூறினார். அதை நம்பி மணிகண்டனும் அனுப்பினார். ஆனால் மணி-கண்டன் வீட்டிற்கு எந்த சிலிண்டரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.

இது குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் உத்தர-விட்டார். விசாரணையில், மணிகண்டன் ஜி.பே., மூலம் தொகை அனுப்பப்பட்ட எண், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பெரிய பனமுட்லுவை சேர்ந்த பெருமாள், 24, உடையது என தெரிந்தது.

அவர், இதேபோல தர்மபுரி, சேலம், திருச்சி உள்பட பல பகுதி-களில், 18-க்கும் மேற்பட்டவர்களிடம் சிலிண்டர் பாய் என கூறி, பணத்தை நுாதன முறையில் பெற்றதும் தெரிந்தது.

இதையடுத்து, பெருமாளை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us