Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மொரப்பூர், தர்மபுரி அகல ரயில் பாதைக்கு நில எடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மொரப்பூர், தர்மபுரி அகல ரயில் பாதைக்கு நில எடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மொரப்பூர், தர்மபுரி அகல ரயில் பாதைக்கு நில எடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மொரப்பூர், தர்மபுரி அகல ரயில் பாதைக்கு நில எடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு

ADDED : மே 12, 2025 02:38 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டத்திற்குட்பட்ட போளையம்பள்ளி, செட்டிக்கரை பஞ்., மற்றும் ராஜாப்பேட்டை வழியாக, மொரப்பூர் - தர்மபுரி புதிய அகல ரயில் பாதை அமையவுள்ளது.

இத்திட்டத்திற்கான, நில எடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது:

மொரப்பூர் - தர்மபுரி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தர்மபுரி ஆகிய மூன்று வட்-டங்களில், 18 கிராமங்களில், 194 ஏக்கர் பட்டா நிலங்கள், 33 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் எடுக்கப்படவுள்ளன.

இதில், 194 ஏக்கர் பட்டா நிலங்களில், 134 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பு சட்டப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீத-முள்ள, 60 ஏக்கரில், மூக்கனுார், செட்டிக்கரை, அளேதருமபுரி, ஏ.ரெட்டிஅள்ளி கிராம மக்களின் நலன் கருதி மாற்றுப்பாதை அமைக்க திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது.

அதேபோல அரசு புறம்போக்கு நிலங்களில், 18 ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீத-முள்ள, 15 ஏக்கர் நிலங்கள் மாற்றுப்பாதை அடிப்படையில் செல்லும் வகையில், மொரப்பூர் - தர்மபுரி திட்டம் செயல்படுத்-தப்படும்.

இவ்வாறு கூறினார்.

டி.ஆர்.ஓ., கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கலைச்செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us